எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 15 மே, 2022

தமிழ் (17) ஆதிச்சநல்லூர் - கி.மு.10 -ஆம் நூற்றாண்டு நாகரிகம் !

தமிழனின் நாகரிகம் பத்தாயிரம் ஆண்டுத் தொமையானது !

------------------------------------------------------------------------------------

 

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுசெய்து, கண்டெடுக்கப் பெற்ற பொருள்களில் இரண்டு, அமெரிக்க நாட்டில் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு, கரிம ஆய்வின் மூலம் (CARBON -14. TEST) அகவை (AGE) கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காக அனுப்பி வைக்கப் பெற்றிருந்தன. ஆய்வு முடிவுகளை மைய அரசின் தொல்லியல் துறையினர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இன்று ஒப்படைத்தனர் !

 

ஆய்வு முடிவின்படி, ஒரு பொருளின் அகவை  கி.மு.905 என்றும், மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளன. அதாவது முறையே கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு ஆகும் !

 

இதுபற்றி நீதியரசர் குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே மிகப் பழமையான மொழி தமிழ்தான் என்பது உறுதியாகிறது என்று பெருமிதத்துடன் சொல்லியுள்ளார் !

 

தமிழர்களே ! மிகப் பழமையான மொழிக்குச் சொந்தக்காரர்களாக  இருக்கும் நாம் இனிமேலாவது நம் தாய்மொழி மீது அக்கறை கொள்வோம் ! தமிழிலேயே பேசுவோம் ! தமிழிலேயே எழுதுவோம் ! தமிழிலேயே சிந்திப்போம் ! குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டுவோம் !!

 

[ பின் குறிப்பு:- அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு பொருள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கண்டு பிடிக்க அறிவியல் வல்லுநர்கள் கரிம ஆய்வு முறையைக் கையாளுகின்றனர். அந்தப் பொருளில் இருக்கும் கரிமம்- 14, (CARBON -14) துகளின் அடிப்படையில் அதன் அகவையைக் (AGE) கணிக்கின்றனர். அமெரிக்க நாட்டில் தான் இதற்கான ஆய்வகம் உள்ளது ]

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

*தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 01]

{15-05-2022}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக