எண்களையும் விட்டுக் கொடுத்து ஏமாளி ஆகலாமா?
பள்ளிப்பருவத்தில் நமது ஆசிரியர்கள் இரண்டு
வகை எண்களை நமக்குச் சொல்லித் தந்தது நினைவிருக்கலாம்.. அவற்றுள் ஒன்று அரபு
எண்கள் எனச் சொல்லப்பட்டன. அவை 1, 2, 3, 4, 5, 6 எனத்
தொடர்ந்து வருபவை. இரண்டாவது உரோமன் எண்கள் எனப்பட்டன. அவை I, II, III, IV, V, VI எனத் தொடர்ந்து வருபவை !
உலகத்திலேயே தொன்மையான மொழி எனச்
சான்றுகளுடன் நிறுவப்பட்டிருப்பது தமிழ். தமிழ் நூல்களுள் தொல்காப்பியம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்
கூறப்படுகிறது !
“எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப” என்னும் தொகாப்பிய நூற்பாவினால்
தொல்காப்பியர் காலத்திலேயே “எண்கள்” பயன்பாட்டில் இருந்தன என்பது புலப்படுகிறது
!
இவ்வாறிருக்கையில், அரபு எண்கள், உரோமன் எண்கள் மட்டுமே நமக்குச் சொல்லித்
தரப்பட்டு தமிழ் எண்கள் நமக்குச் சொல்லித் தரப்படாமைக்குக் காரணம் என்ன ? தமிழில் “எண்கள்” இல்லாமலா இருந்தன ?
தமிழில் எண்களைக் குறிக்க “க, உ, ங, ச, ரு ...” போன்ற எழுத்துகள் பயன்பாட்டில் இருந்தன என்பதை நாம் அறிவோம். அவை உங்கள் பார்வைக்காக மீளத் தரப்படுகின்றன !
இவற்றை “எழுத்துகள்” எனக் குறிப்பிடுவதை விட “குறியீடுகள்” என்று சொல்வதே
பொருந்தும். ஏனெனில், க, உ, ரு, எ, அ என்பவை மட்டுமே “எழுத்து” வடிவில் இருப்பவை. 3, 4, 6, 9 ஆகியவற்றைக் குறிப்பவை “எழுத்துகள்” அல்ல. அவை
வெறும் குறியீடுகளே !
”க” முதல் ”க0” அல்லது ”ய” வரை எண்களைக்
குறிக்கும் குறியீடுகள் மட்டுமே “தமிழ் எண்கள்” எனவும் “1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 …… ஆகியவை அரபு எண்கள் எனவும் ஒரு கருத்து
பரவலாக மக்கள் மனதில் பதிவாகி இருக்கிறது. இது உண்மை தானா என்பதைச் சற்று ஆய்வு
செய்வோம் !
இக்காலத்தில் தமிழில் வழக்கில் உள்ள அ, ஆ, இ, ஈ போன்ற எழுத்துகளின் வரி வடிவங்கள் பண்டைக்
காலத்தில் இல்லை. அப்போது இருந்த வரி வடிவங்கள் மெல்ல மெல்ல உரு மாற்றம் அடைந்து
இப்போதுள்ள எழுத்துகளாக படிமுறை வளர்ச்சி
(பரிணாம வளர்ச்சி) பெற்றுள்ளன ! (இது பற்றிய செய்தி தனிப்பதிவில் தரப்பட்டுள்ளது.)
எழுத்துகளின் வரி வடிவம் போலவே, பண்டைக் காலத்
“தமிழ் எண்”களின்
குறியீடுகளில் ( க, உ முதலியவை ) சிற்சில மாற்றங்கள் (படிமுறை வளர்ச்சி)
ஏற்பட்டு 1, 2, 3, 4, 5,
6, 7, 8, 9 என இப்போதைய
நிலையை அடைந்துள்ளன !
மேலே உள்ள பட்டியலைப் பாருங்கள். “ க ” என்னும்
குறியீட்டுக்குள் “ 1 ” இருப்பதைக் காணலாம். “ உ” என்னும்
குறியீட்டுக்குள் “ 2 ” இருப்பதைக் காணலாம். “ ரு ” என்னும்
குறியீட்டுக்குள் “ 5 “ இருப்பதைக் காணலாம்.
அடியில் தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் !
பண்டைக் காலத்தில் எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த “குறியீட்டுக்குள்” இப்போது
பயன்பாட்டில் உள்ள “1,
2, 3, 4, 5, 6, 7, 8, 9 போன்ற எண்கள்
உள்ளொடுங்கி நிற்பதைக் காணலாம் !
இதிலிருந்து உங்களுக்கு ஒரு செய்தி தெளிவாகி
இருக்கும். 1, 2, 3, 4,
5, 6, 7, 8, 9, என்பவை தமிழ்
எண்களே ! அவை அரபு எண்களல்ல ! இந்தியா முழுவதும் – ஏன்
பெரும்பாலான உலக நாடுகளில் 1, 2, 3, 4, 5 6, 7, 8, 9, என்னும் தமிழ்
எண்களே பயன்பாட்டில் உள்ளன என்பது நமக்குப் பெருமையே !
கிரேக்க
நாகரிகத்தைப் போல பழம் பெரும் நாகரிகத்திற்குச் சொந்தக் காரர்களான
தமிழர்களின் கொடை – உலக நாடுகளுக்கு அளித்த கொடை - தான் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, என்னும் தமிழ்
எண்கள் என்பதை உலகெங்கும் பறைசாற்றி ஓங்கி ஒலித்திடுவோம் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு, 2053, விடை (வைகாசி) 04]
{18-05-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக