தஞ்சை நகரின் ஒரு பகுதியாக உள்ள கருந்திட்டைக்குடி எனப்படும் கரந்தை நகரில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை. பல பாடல்களைப் படைத்துள்ள இவர், இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்து உங்கள் பார்வைக்கு :-
------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------
வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே !
.......மன்னியமூ வேந்தர்கடம்
மடிவளர்ந்த மகளே !
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின்
குன்றம்,
.......தென்குமரி ஆயிடைநற் செங்கோல்கொள்
செல்வி !
கானார்ந்த தேனே!கற் கண்டே!நற்
கனியே !
.......கண்ணே!கண் மணியே!அக் கட்புலஞ்சேர்
தேவி !
ஆனாத நூற்கடலை அளித்தருளும்
அமிழ்தே !
.......அம்மே!நின்
சீர்முழுதும் அறைதலியார்க் கெளிதே !
-------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------
வான் ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !
.......மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !
தேன் ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்
.......தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !
கான் ஆர்ந்த தேனே ! கற்கண்டே ! நற்கனியே !
.......கண்ணே ! கண்மணியே ! அக் கட்புலம் சேர் தேவி !
ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !
.......அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே !
-------------------------------------------------------------------------------
-------------------------------------
வானார்ந்த பொதி = வானுயர்ந்த பொதிய மலை ; மன்னிய = பெருமை மிக்க ;
தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும்
நீர்ச் சுனைகள் நிறைந்த ; திருமாலின் குன்றம் = வேங்கட மலை ;
ஆயிடை = அவ்விடம் (இடைப்பட்ட பகுதியில்) ; செங்கோல் கொள் =
ஆட்சிபுரிகின்ற ; கானார்ந்த தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன்
போன்ற தமிழே ! கட்புலம் = பார்வை ; ஆனாத = குறையாத ; சீர் = பெருமை ; அறைதல் = சொல்லுதல் ; யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.
-------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் ! தமிழ்
! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
20533, மீனம் (பங்குனி) 29]
{12-04-2022}
------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக