எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 25 மே, 2022

தமிழ் (23) தமிழில் பேசுவோம் ! தமிழில் எழுதுவோம் !

, , , க்ஷ, , ஆகிய கிரந்த எழுத்துகளை விலக்குவோம் !

 -----------------------------------------------------------------------------------


தமிழில் உள்ள எழுத்துகள் மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. அவை உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து ஆகியவை !

 

”, முதல் வரையிலான  12 எழுத்துகளும் உயிரெழுத்துகள் எனப்படும். க், ங், ச், ஞ், ட், எனத் தொடங்கி, ”ன்“ –ல் முடியும் 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் !

 

, கா,.......கௌ எனத் தொடங்கி .,னா......னௌஎன முடியும் 12 X 18 = 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்!

 

என்பது ஆய்த எழுத்து; (ஆயுதம் அன்று ! ஆய்தம் என்பதே சரி !)

 

சரி ! தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்துணை ? 12 + 18 + 216 + 1 = 247. தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயமுண்டா ? இல்லை அல்லவா ?

 

இப்பொழுது NATARAJAN என்பதைத் தமிழில் எழுதுங்கள் ! எழுதிவிட்டீர்களா ? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் !

 

என்ன இது ?நடராஜன்என்று எழுதி இருக்கிறீர்கள் ? நீங்கள்தானே ஒப்புக் கொண்டீர்கள், தமிழ் எழுத்துகள் 247 என்று ? இந்த 247 –ல் என்னும் எழுத்து இருக்கிறதா ? இல்லை அல்லவா ? அப்புறம் எங்கிருந்து இந்த வந்தது ?

 

தமிழில் சில ஒலிகளுக்கு எழுத்துகள் இல்லை என்று சொல்லி, சில தமிழ்ப் பகைவர்கள்  ”, ””, “”, ”க்ஷ”, ”ஆகிய ஐந்து கிரந்த எழுத்துகளைத் தமிழ் நாட்டில் புகுத்தி விட்டனர்.  மஞ்சள்என்று உரக்கச் சொல்லுங்கள் ! 


இதில் வரும் என்னும் எழுத்து என்றுதானே ஒலிக்கிறது ? அப்புறம் எதற்குத் தனியாக ஒரு ”. “மகம்என்று உரக்கச் சொல்லிப் பாருங்கள் ! இதில் வரும் என்பது என்று தானே ஒலிக்கிறது ! அப்புறம் எதற்கு இந்த ” ?

 

சமற்கிருதம், இந்தி ஆகியவற்றில் ”, “ஆகிய இரண்டு ஒலிகளுக்கும் எழுத்துகள் இல்லை. எறும்புஎன்று வடமொழியில் எழுத முடியாது.” “ஏறும்புஎன்று தான் எழுத முடியும். தொல்காப்பியம்என்று இந்தியில் எழுத முடியாது; “தோல்காப்பியம்என்று தான் எழுத முடியும் !

 

வங்காள மொழியில் என்னும் ஒலிக்கு எழுத்து இல்லை. வைத்தியநாதன்என்று வங்காள மொழியில் எழுத முடியாது. பைத்தியநாதன்என்றுதான் எழுத முடியும். அங்கு என்னும் ஒலி இல்லாமையை என்னும் ஒலி தான் இட்டு நிரப்புகிறது !

 

ஆங்கிலத்தில் அன்பழகன்என்று எழுத முடியாது. ANBAZHAGAN என்று எழுதுகிறோம். “ZHA" மூன்று எழுத்துகளும் என்னும் ஒலியைக் கொண்டுவர முடியாது. ZINC, ZEBRA, ZONE, ZOO ஆகிய எந்த ஆங்கிலச் சொல்லிலும் எழுத்தின் ஒலி வருகிறதா ? இல்லையே ! ஆங்கிலத்தில் ஒலி இல்லை என்பது உண்மை அன்றோ !

 

உலகத்தில் எந்த மொழியை எழுத்துக் கொண்டாலும், அந்த மொழிகளில் அனைத்து ஒலிகளையும் ஒலிப்பதற்கான எழுத்துகள் இருக்கின்றன என்று யாராலும் கூற முடியாது. குறிப்பிட்ட ஒலியைப் பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) ஏதாவதொரு எழுத்து இடத்திற்குத் தக்கவாறு அங்கு அமைகிறது !

 

இந்த உண்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், தமிழில் கிரந்த எழுத்துகளான ”, “”, “”, “க்ஷ”, “ஆகியவற்றைப் புகுத்தியவர்களின் தமிழ்ப் பற்றை என்னவென்பது ?   அவற்றை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் நாமும் தமிழ்ப் பகைவர்என்னும் பழிக்கல்லவா ஆளாகிறோம் !.

 

இனிமேல், நாம் நடராசன்”, என்றே எழுதுவோம் ! நடராஜன்வேண்டாம். சுரேச்குமார்என்று எழுதுவோம்; “சுரேஷ்குமார்வேண்டாம். “”இராமதாசுஎன்று எழுதுவோம்; “இராமதாஸ்வேண்டாம் !

 

என்ன நண்பர்களே ! கிரந்த எழுத்துகளை விலக்கிவிட்டுத் தமிழ் எழுத்துகளையே இனிப்  பயன்படுத்தலாமா ?  நீங்கள் அணியம் (READY) என்றால் நானும் அணியமே ! அணியம்என்று பின்னீடு செய்து நமது தமிழ்ப் பற்றை உலகறியச் செய்வோமே ! இதற்கும் ஒரு விழைவு” (LIKE) தராமல் அணியம்என்று கருத்துரை (COMMENT) எழுதுங்கள் பார்க்கலாம் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 11]

{25-05-2022}

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக